“தமிழகத்தில் போதை புழக்கம் அதிகரித்துள்ளது என்ற ஹெச்.ராஜாவின் குற்றச்சாட்டிற்கு, ஒரு வேளை, அவர் எங்கே விற்கிறார் என கேட்டு சொல்லுங்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி தந்துள்ளார்.”சிக்கலுள்ள கர்ப்பங்களுக்கான சிகிச்சை வழிக்காட்டுதல்கள் பயிற்சி கருத்தரங்கத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. “மகிழ்ச்சியான மகப்பேறு, மகத்தான மருத்துவம்! என்ற தலைப்பில், சிக்கலுள்ள கர்ப்பங்களுக்கான சிகிச்சை வழிக்காட்டுதல்கள் பற்றிய பயிற்சி கருத்தரங்கில், அது குறித்தான கையேடுகளையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், மாநகர, மாவட்ட, மற்றும் நகராட்சி நல அலுவலர்களம் தமிழகம் முழுவதிலும் இருந்து மகப்பேறு மருத்துவர்கள் பலரும் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தாய் சேய் நலத்தை மேம்படுத்துதலில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்றார். மருத்துவ கட்டமைப்பில் தேசிய அளவிற்கு இணையாகவும் பல நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு தமிழகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மகப்பேறு இறப்பு விகிதம் படிப்படியாக தமிழத்தில் குறைந்து வருகிறது என குறிப்பிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் குழுந்தைகள் இறப்பு, பூஜ்ஜியம் என்ற அளவை கொண்டு வர வேண்டும் எனவும் சுகப்பிரவத்திற்கு யோகா பயிற்சி உதவும் எனவும் அவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
2023 – 2024 காலக்கட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு இறப்புகளே இல்லாமல் இருந்ததைப் போல தற்போது 6 இடங்களில் பிரசவத்தின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்றார். பிரசவத்தின் போது குழந்தை இறப்பு விகிதமும் குறைந்துள்ளது எனவும் பிரசவ கால தாய்மார்களுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.தமிழகத்தில் இருந்து 19 கொரோனா மாதிரிகள் சோதனைக்கு அனுப்பபட்டதில், ஒமைக்காரன் என்ற வீரியமற்ற கொரானா அறியப்பட்டுள்ளதாகவும் கொரோனா குறித்து அச்சம் வேண்டாம் எனவும் அமைச்சர் மா.சு. விளக்கம் தெரிவித்துள்ளாா். 2020-ஆம் ஆண்டு 32 % நோய் எதிர்ப்பு சக்தி, மக்களிடம் இருந்த நிலையில், தற்போது அது 97 % என்ற அளவில் அதிகரித்துள்ளதாகவும், பல தரப்பு மக்களிடம், பல இடங்களில் எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகள் மூலமாக இது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது என்று மா.சுப்பிரமணி தெரிவித்தார்.
தமிழகத்தில் 25 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 நகர்புற நிலையங்களும் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது குறித்தான கேள்விக்கு, புதுக்கோட்டையில் 21 ஆரம்ப சுகாதார நிலையங்கள் நேற்று திறந்து வைத்ததோடு 8 இடங்களில் புதிதாக கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டி உள்ளதையும் கரூரில் 11 கட்டிடங்களை திறந்து வைத்து, 22 கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளதையும் அவர் பட்டியலிட்டார். ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக 50 கட்டி முடித்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இரண்டு மூன்று வாரங்களில், 50 சுகாதார நிலையங்களை முதலமைச்சரால் திறந்து வைக்கப்படுவதையும் அறிவித்தார்.
தமிழகத்திற்கு புதிய மருத்துவ கல்லூரி வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, ஜே.பி.நட்டாவிடம் புதிய மருத்துவமனை வேண்டி கடிதம் கொடுத்திருப்பதாக கூறிய மா.சுப்பிரமணியன், நட்டவை பார்த்தால் கேளுங்கள் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் போதைப் புழக்கம் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் மாறி எனவும் கல்வி நிறுவனங்கள் அருகிலேயே போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாகவும் பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் வினவினர். அதற்கு, ஒருவேளை அவர் எங்கே விற்கிறார் என கேட்டு சொல்லுங்கள் என்று, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து விட்டு புறப்பட்டார்.
திருப்பரங்குன்றம் ரகசியம்! அமித்ஷா செயலால் மரண பயணத்தில அதிமுக!