ஆங்கில மொழி பேசுவது அவமானம் அல்ல என ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளாா்.நம் நாட்டிலுள்ள ஏழை குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக் கொள்ள கூடாது என பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது. தங்களை நோக்கி கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக ஆங்கிலம் கற்கக் கூடாது என பாஜகவும் நினைக்கிறது. இன்றைய உலகில் தாய்மொழியை போலவே ஆங்கிலம் முக்கியமானதாகவே கருதப்பட்டு வருகின்றது. அனைத்து பிராந்திய மொழிகளும் இந்தியாவின் ஆன்மாதான். அதே நேரம் ஆங்கிலமும் கற்க வேண்டும். குழந்தைகள் ஆங்கிலம் கற்பதுதான் உலகத்துடன் போட்டி போடுவதற்கான பாதையாக இருக்கும். நாட்டில் ஆங்கிலத்தில் பேசுவது அவமானமாக கருதும் நிலை ஏற்படும் என அமித்ஷா கூறியதற்கு ராகுல் பதிலடி கொடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் 1,600 கோடி பாஸ்வேர்டுகள் திருட்டு.. ஃபோர்ப்ஸ் அதிர்ச்சி தகவல்..