Homeசெய்திகள்அரசியல்ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்..? உள்ளே பிடுச்சு போடுங்க... ஆவேசமான ராகுல் காந்தி..!

ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்..? உள்ளே பிடுச்சு போடுங்க… ஆவேசமான ராகுல் காந்தி..!

-

- Advertisement -

காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ், தலைவர் மோகன் பகவத்தின் பேசிய ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு இந்தியா சுதந்திரம் பெற்றது என்ற அவரது அறிக்கை தேசத்துரோகத்திற்கு ஒப்பானது என்று கூறினார். 1947-ல் நாடு சுதந்திரம் பெறவில்லை என்ற பகவத்தின் கூற்று ஒவ்வொரு இந்தியனையும் அவமதிப்பதாகும் என்றும் அவர் கூறினார். வேறு எந்த நாட்டிலும் பகவத் இதைச் சொல்லியிருந்தால், அவர் கைது செய்யப்பட்டிருப்பார் எனவும் தெரிவித்தார்.

கட்சியின் புதிய தலைமையக திறப்பு விழாவில் கட்சித் தலைவர்களிடம் உரையாற்றிய ராகுல் காந்தி, “நாட்டின் சுதந்திர இயக்கம், அரசியலமைப்புச் சட்டம் பற்றி ஒவ்வொரு 2-3 நாட்களுக்கும் நாட்டுக்கு எடுத்துச் சொல்லும் துணிச்சல் மோகன் பகவத்துக்கு உண்டு. அவர் என்ன நினைக்கிறார்? நேற்று அவர் பேசியது தேசத்துரோகம் போன்றது. ஏனென்றால் அது அரசியலமைப்புச் சட்டம் செல்லாது என்று கூறியது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் செல்லாது.

இதை பகிரங்கமாகச் சொல்ல அவருக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும். இது வேறு எந்த நாட்டிலும் நடந்திருந்தால், அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும். 1947-ல் இந்தியா சுதந்திரம் பெறவில்லை என்று சொல்வது ஒவ்வொரு இந்தியனையும் அவமதிப்பதாகும். இந்த முட்டாள்தனத்தைக் கேட்பதை நிறுத்த வேண்டிய நேரம் இது, ஏனென்றால் இந்த மக்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கலாம் என்றும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கலாம் என்றும் நினைக்கிறார்கள்” என தெரிவித்தார்.

முன்னதாக, இரண்டு நாட்களுக்கு முன்பு திங்கட்கிழமை, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ‘‘அயோத்தியில் ராம்லாலாவின் பிராண பிரதிஷ்டை தேதியை பிரதிஷ்ட துவாதசியாகக் கொண்டாட வேண்டும். ஏனெனில் பல நூற்றாண்டுகளாக எதிரி தாக்குதல்களை எதிர்கொண்ட நாட்டிற்கு உண்மையான சுதந்திரம் தேவை. இது இந்த நாளில் பெறப்பட்டது’’ எனப் பேசியது சர்ச்சையானது.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ராகுல்காந்தி, ‘‘நாட்டில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே நடந்து வரும் போர் இது. ஒரு பக்கம் நமது கருத்து, அது அரசியலமைப்பின் கருத்து, மறுபுறம் அதற்கு எதிரான சங்கத்தின் கருத்து. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சங்கத்தின் நிகழ்ச்சி நிரலைத் தடுக்கக்கூடிய வேறு எந்தக் கட்சியும் நாட்டில் இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே அவர்களைத் தடுக்க முடியும், ஏனென்றால் நாங்கள் ஒரு சித்தாந்தத்தைக் கொண்ட கட்சி’’ என ராகுல்காந்தி தெரிவித்தார்.

முன்னதாக டெல்லியில், கோட்லா சாலையில் அமைந்துள்ள கட்சியின் புதிய தலைமையகமான ‘இந்திரா பவனை’ காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். அப்போது, ​​காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பிற முக்கியத் தலைவர்களும் உடனிருந்தனர்.

MUST READ