Homeசெய்திகள்அரசியல்விஜய் தவழுகின்ற குழந்தை, நாங்கள் பிடி உஷா- சேகர் பாபு விமா்சனம்

விஜய் தவழுகின்ற குழந்தை, நாங்கள் பிடி உஷா- சேகர் பாபு விமா்சனம்

-

- Advertisement -

விஜய் தவழுகின்ற குழந்தை, நாங்கள் பிடி உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

விஜய் தவழுகின்ற குழந்தை, நாங்கள் பிடி உஷா- சேகர் பாபு விமா்சனம்

சென்னை திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட மங்களபுரம் பகுதியில் கலைஞரின் வருமுன் காப்போம் ”சிறப்பு மருத்துவ முகாமினை” இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பார்வையிட்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். மேலும், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவா்கள் தமிழகத்தில் மன்னராட்சி நடைபெற்று வருகிறது எனவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்தது குறித்தான கேள்விக்கு, கண்ணதாசனின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டினார். மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே, மக்களாட்சி காணுகின்றது எங்கள் நெஞ்சமே, எங்களாட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே, கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே, கருணை தீபம் ஏற்றி வைத்ததெங்கள் நெஞ்சமே என (நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த பணக்கார குடும்பம் படத்தின் பாடலை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.

சிறை என்றாலும், போராட்டம் என்றாலும் என்னவென்று தெரியாதவர்கள், ஆர்ப்பாட்டக் களம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், பொதுக்கூட்டம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், மக்கள் பணி   என்றால் என்னவென்று தெரியாதவர்கள்,   புயல் மழை வெள்ளம் போன்றவற்றில் கூட தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்து வந்து, பத்து பேருக்கு உதவி செய்து  அதை   போட்டோ  எடுத்து  பிரசுரம் செய்கிறார்கள். 2026 ஆம் ஆண்டு பெண்கள் தான் திமுக ஆட்சியை தூக்கி பிடிப்பார்கள். தமிழ்நாடு முதல்வர் எங்கு போனாலும் 80 சதவீதம் பெண்கள் வரவேற்கக் கூடியவா்களாக உள்ளனர். மேலும் பல கரடு முரடான பாதைகளை கடந்து வந்த சக்திமயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது.

விஜய் தவழுகின்ற குழந்தை, நாங்கள் பிடி உஷா- சேகர் பாபு விமா்சனம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பேசியதாவது, ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் வரும் முன் காப்பகம் திட்டம் மூலமாக மண்டல வாரியாக பகுதி மருத்துவ முகாம் தொடங்கப்படும். மக்கள் இந்த மருத்துவ முகாமில் பயன் பெறலாம். மண்டலம் 4, 6, 11, 12, 13 ஆகிய இடங்களில் மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துள்ளாா். இந்த மருந்துவ முகாமில் ரத்த பரிசோதனை, ஹீமோகுளோபின் எவ்வளவு உள்ளது? டெங்கு உள்ளதா? கர்ப்பபை புற்றுநோய் உள்ளதா? டிபி நோய் உள்ளதா? உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளையும் இந்த மருத்துவ முகாம்களின் தெரிந்துக்கொள்ளலாம் எனவும் மருத்துவ முகாம்களில் கலைஞரை காப்பீட்டு திட்டத்தில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கான பணிகளும் அதற்கான காப்பீட்டு அட்டையையும் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளாா்.

மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்தப்படி எப்போது சுகாதாரத்துறையில் இருந்து மருத்துவர்கள் மாநகராட்சி மருத்துவமனைகளில் பணியாற்றுவார்கள் என்ற கேள்விக்கு? 150 மருத்துவர்கள் சுகாதாரத் துறையிலிருந்து மாநகராட்சிக்கு பணியாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். மேலும் வரக்கூடிய நாட்களில் மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தார். தொடர்ந்து செவிலியர்களும் மாநகராட்சி தேவையின் அடிப்படையில் ஆரம்ப சுகாதார துறைக்கும், மருத்துவ துறைக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறோம். அதன் அடிப்படையில் செவிலியர்களும் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளாா்.

உலக இட்லி தினத்தை முன்னிட்டு: நூறு மகளிர், 100 விதமான சட்னி – 60 வினாடிகளில்!

 

MUST READ