Homeசெய்திகள்அரசியல்தமிழக அரசு பள்ளிகளை பிஎம்ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம்: அண்ணாமலை அடாவடி..!

தமிழக அரசு பள்ளிகளை பிஎம்ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம்: அண்ணாமலை அடாவடி..!

-

- Advertisement -

‘‘தமிழகத்தில் பா.ஜ.க, ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு அரசு பள்ளிகளையும் மேம்படுத்தி பிஎம்ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம்’’ என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,‘‘தி.மு.க., மேடையில் ஆபாச பேச்சுகள் மட்டும் தான் இருக்கின்றன. அவர்கள் பேசுவது எல்லாம் ஆபாச பேச்சுகள். அதற்கு கைதட்ட 100 பேர். கைதட்டுவதால், நாம் சரியான பாதையில் போகிறோம் என்ற மாய உலகத்தில் முதல்வர் அமர்ந்துள்ளார். 2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற மாய உலகில் உள்ளார். அங்கு இருக்கும் தொண்டர்கள், ஆபாச பேச்சுக்கு கைதட்டுவதே காரணம்.

முதலமைச்சருக்கு நெருக்கமானவருக்கு குற்ற வழக்குகள் துறை இயக்குனராக நியமனம் - அண்ணாமலை கண்டனம்

வட மாநிலத்தவர்களை அமைச்சர்கள் விமர்சித்து பேசுகின்றனர். இதற்கு கைதட்டுகின்றனர். இவர்கள் யாரும் கும்மிடிபூண்டியை தாண்டி இந்தியா எப்படி இருக்கிறது என பார்த்தது கிடையாது. இவர்கள் 1967 ல் மாய உலகில் மாட்டி உள்ளனர். தமிழகத்தை தாண்டி பாரதம் முழுவதும் சென்றால் நாட்டின் வளர்ச்சி பற்றி தெரியும். வட மாநிலங்களில் இருப்பவர்கள் யாரும், நம்மை இழிவாக பேசியது இல்லை. எந்த அரசியல்வாதியும் தமிழ் சமுதாயத்தை பற்றி தவறாக பேசவில்லை. ஆனால், தி.மு.க., தலைவர்கள் மட்டும் ஒவ்வொரு மாநிலத்தை பற்றி தவறாக பேசுகின்றனர்.

இதற்கு தி.மு.க.,வினருக்கு பயம். வெளியே மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்ற பயம். அவர்கள், குடும்பத்தினர் மட்டும் ஆட்சியில் உள்ளதால், மக்களின் மனநிலை தெரியாமல் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். மக்களுடன் பழகினால் தான் மக்கள் என்ன நினைப்பார்கள் என தெரியும். ஆனால், அண்ணாதுரைக்கு பிறகு, தி.மு.க.,வினர் கூண்டுக்கிளியாக அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு வெளியே வந்து மக்கள் என்ன நினைக்கின்றனர் என தெரியாது.

சுதந்திரத்திற்கு பிறகு 2 கல்விக் கொள்கை தான் இருந்தது. தேசிய கல்விக் கொள்கையில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கட்டாயமாக தமிழ் மொழி தான் கற்றல் மொழியாக இருக்க வேண்டும் என கொண்டு வந்தார். இதனை தி.மு.க.,க்காரன் சொல்ல மாட்டான். இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அவர்கள் இதைக் கொண்டு வரவில்லை. ஆனால் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். 6,7,8ம் வகுப்புகளில் தாய்மொழியில் கற்றுக் கொடுக்க முயற்சி எடுப்போம்.

தி.மு.க., காங்கிரசுடன் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது, 3வது கட்டாய மொழி ஹிந்தி தான் இருந்தது. முதல்முறையாக மும்மொழி கொள்கையில், விருப்பமான மொழியை 3வது மொழியாக படியுங்கள் என கூறப்பட்டு உள்ளது.

கையெழுத்து இயக்கம் ஆரம்பித்து 28 நாளில் 26 லட்சம் பேர் கையெழுத்து போட்டு உள்ளனர்.நீட் தேர்வுக்கு எதிராக, கவர்னருக்கு எதிராக திமுக., ஆரம்பித்த கையெழுத்து இயக்கத்தில் எத்தனை பேர் கையெழுத்து போட்டு உள்ளனர் என தெரியாது.பா.ஜ.,வின் கையெழுத்து இயக்கத்தில் இணையதளத்தில் 8,20,336 பேர் கையெழுத்து போட்டு உள்ளனர். நேரடியாக 17,89,694 பேர் கையெழுத்து போட்டு உள்ளனர். நேற்று மாலை வரை 26,10,033 பேர் கையெழுத்து போட்டு உள்ளனர்.இது தமிழகத்தில் அரசியல் புரட்சி. இதே வேகத்தில் போனால், 2 கோடி கையெழுத்தை நோக்கி போயிருப்போம். இன்னும் 74 லட்சம் கையெழுத்து தேவைப்படுகிறது. 8 வது மாநாடு நடக்கும் போது நமது இலக்கான ஒரு கோடியை தாண்டி இரண்டு கோடியை நோக்கி சென்றிருப்போம்.

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி 4 காங்கிரஸ் 3 என்று கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த கூட்டணி தான் வெற்றிப்பெறும் என்று பெரும்பாலான கருத்து கணிப்பு தெரிவித்திருந்தது. மேலும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது அனுதாபத்தை சேர்த்தது. பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து அவர் மேற்கொண்ட பிரச்சாரத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தது. ஆனாலும் வாக்கு எண்ணிக்கையில் பாஜக 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களான பிரவீன் கந்தெல்வால்- சாந்தினி சௌக் தொகுதி, ஹர்ஷ் மல்ஹோத்ரா- கிழக்க டெல்லி தொகுதி, சுபான்சூரி ஸ்வராஜ் – புது டெல்லி தொகுதி, மனோஜ் திவாரி – வடகிழக்கு டெல்லி தொகுதி, யோகேந்திர சாண்டேலியா- வடமேற்கு டெல்லி தொகுதி, திருமதி கமல்ஜீத் ஷெராவத் – மேற்கு டெல்லி தொகுதி, ராம்வீர் சிங் பிதூரி – தெற்கு டெல்லி தொகுதி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணியை முற்றிலுமாக துடைத்தெறிந்து பாஜக வெற்றி பெற்றுள்ளது.

தி.மு.க.,வில் யாரும் படித்து அதிகாரத்திற்கு வரவில்லை. உதயநிதி பட்டம் வாங்கியது தெரியாது எங்கு படித்தார் தெரியாது. கல்வி அமைச்சர் அகில உலக உதயநிதி ரசிகர் மன்றத்தின் தலைவராக உள்ளார்.இவர் ஸ்டாலின் பின்னால் செல்வார். இதற்கு பிறகு நேரம் இருந்தால் கல்வியை பார்ப்பார்.இவர்களுக்கு கல்வியை பற்றி என்ன தெரியும். பல வழக்குகளில் சிக்கிய தி.மு.க., அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து நம் குழந்தைகள் என்ன படிக்கப் போகின்றனர் என முடிவு செய்யப் போகின்றனர்.

அரசு பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கை வரும்போது உலகத் தரம் வாய்ந்த குழந்தைகள் தயார்படுத்த முடியும்.அரசு பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கை வந்தால் உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்கும். அரசு பள்ளியில் படித்தாலும், தனியார் பள்ளியில் படித்தாலும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பது தான் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படை நோக்கம். ஆனால், தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளியில் ஒரு கல்வி, அரசு பள்ளியில் தரமில்லாத கல்வி கொடுத்து தி.மு.க., தலைவர்களுக்கு போஸ்டர் ஒட்டுவதற்காக அரசு பள்ளி மாணவர்களை தயார்படுத்துகின்றனர்.

பற்ற வைத்த பாஜக… அடித்து நொறுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பின்னணியை உடைக்கும் அருள்மொழி பாஜக, முதல்வர் மு.க.ஸ்டாலின், அருள்மொழி, மக்களவை கட்டிடம், திமுக புதிதாக கட்டப்பட்ட மாநிலங்களவை மற்றும் மக்களவை கட்டிடத்தில் கூடுதல் இருக்கைகளை அமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இதனால் தான் தற்போது முதல் தாக்குதலை எடுத்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்'' என-திராவிடர் கழக பிரச்சார குழு செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி விளக்கம் அளித்துள்ளார். அம்பத்தூரில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், ''1967ல் டெல்லி தமிழ்நாட்டிற்கு போட்ட பூட்டை இன்று வரைக்கும் உடைக்க முடியாமல், செருப்பில்லாமல் சாட்டையை அடித்துகொண்டு திரிகிறார் அண்ணமாலை. நீ சாட்டையை அடித்துக் கொண்டே திரிய வேண்டியதும், நடந்து கொண்டே இருக்க வேண்டியதும் தான். அடுத்த 2026 தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்றும் கூறிக்கொண்டு உள்ளார். 25 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டும். 1950ல் அரசியல் அமைப்புச் சட்டம் வந்தது அதற்கு பிறகு 1975 இல் அப்பொழுது இந்திரா காந்தி அம்மையார் அவசர சட்டம் கொண்டு வந்த பிறகு, 1976 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எம்.பி-களை மாற்ற வேண்டுமா, குறைக்க வேண்டுமா? கூட்ட வேண்டுமா? என்ற கேள்வி வரும்பொழுது வீண் பிரச்சனை வரும் என மீண்டும் 25 ஆண்டுக்கு தள்ளிப் போட்டனர். மீண்டும் 25 ஆண்டு முடிந்து 2002-ல் அப்போது பாஜகவினர் ஆட்சியில் இருந்தார்கள். 2002-ல் வந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால், அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி குறைப்பது கூட்டுவது மீண்டும் பிரச்சினை எழுந்தது. அதனால், மீண்டும் 25 ஆண்டுக்கு தள்ளி வைத்து 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் இந்த தொகுதிகள் மறுபடியும் கணக்கிடப்படும் என்று மீண்டும் அரசியல் சட்ட திருத்தம் வந்தது. அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ளது. அதில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுத்து ஒரு சட்டத்தை நிறைவேற்றம் செய்தார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்து 2026 ல் இந்த தொகுதியெல்லாம் மறு கணக்கீடு செய்யும்போது பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்போம் என்று கூறியுள்ளார்கள். ஆனால் எப்படி 2026-ல் நடைமுறைக்கு வரும். முதலில் இருந்த பாராளுமன்றம் பிரிட்டிஷ் கட்டிடம் மிகவும் அழகாக இருந்தது. இவர்கள் சத்திரம் ஒன்று கட்டி வைத்துள்ளார்கள். அதை பார்த்தாலே இந்த ஊர்களில் தர்மசத்திரம் போல பெறியதாக இருக்கும். இதற்கு பரதேசி மடம் என்று பெயர். உண்மையில் அங்கு பரதேசிகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது நோக்கம் ஆகும். அவர்களுக்கு மக்களால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை எம்பி யாக கொண்டு வர முடியாது. கும்பமேளா சாமியார்களை போன்றவர்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து அமர்த்த வேண்டும் என பாஜகவின் நோக்கம் அதற்கேற்றார் போல் புதிய கட்டிடத்தை கட்டிவைத்துள்ளார்கள். மக்களவைக்கு 550 இருக்கை தேவை. ஆனால் அவர்கள் கட்டி வைத்திருப்பது 888 இருக்கைகள். மாநிலங்களவைக்கு 254 இருக்கை உள்ள இடத்தில் 380 இருக்கை போடப்பட்டுள்ளது. மாநிலங்களவைக்கு இது எல்லாம் செய்து வைத்துவிட்டு தான் அறிவிக்காமல் முதல் தாக்குதலை எடுத்து விட்டார் தமிழ்நாட்டில் முதலமைச்சர். தமிழ்நாடு அரசு இந்திய மக்கள் தொகை கட்டுப்படுத்தலை ஒழுங்காக பின்பற்றி நாம் இருவர் நமக்கு இருவர். நாம் இருவர் நமக்கு ஒருவர் என்கிற அளவுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து மக்கள் தொகையை குறைந்து உள்ளோம், இதனால் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்றால் உங்களுடைய மதிய பிஜேபி ஆட்சி 1976 லே அமண்ட்மெண்ட் வந்தபொழுது 2002 ல் சட்ட திருத்தம் வந்தபோது நீங்களே ஒரு சட்ட திட்டத்தை கொண்டு வந்து இப்போது உள்ள தொகுதி மாறாது என்றும் மக்களவையில் திருத்தம் கொண்டு வர வேண்டும். நாங்கள் கொண்டு வர வைக்கிறோம் என தமிழ்நாட்டின் பிஜேபி தலைவர்கள் சொல்வார்களா. கொண்டு வர வைப்போம் என கூறுவார்களா?. திராவிட முன்னேற்றக் கழக தோழர் போய் ஹிந்தியை தார் போட்டு அழித்து வந்தால் இவர்கள் பின்னாடியே மண்ணெண்ணெய் கொண்டு அதை இந்தி வார்த்தை மேல் பூசப்பட்ட தாரை அழித்து வந்தார்கள். அவ்வளவு பெரிய தேச பக்தர்கள் அந்த வேலையைத்தான் இன்றும் பாஜக செய்து கொண்டிருக்கிறது'' என்று அவர் தெரிவித்தார்.

அனைத்து தனியார் , சிபிஎஸ்இ பள்ளிகளில் மூன்று மொழிகள் படிக்கின்றனர். அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் இரண்டு மொழிகள் படிக்கின்றனர். தமிழகம் வளராமல் இருப்பதற்கு அடிப்படை காரணம், இங்கிருப்பவர்கள் பேசுவது வேறு யாருக்கும் புரியாது.

வேலையில்லாத முதல்வர் கூட்டம் போடுகிறார் என வேலையில்லாத 3 முதல்வர்கள் விமானம் பிடித்து வருகின்றனர். தே.ஜ., கூட்டணி வரும் போது அரசு, தனியார் பள்ளிகளில் சம கல்வி வரும். அரசு பள்ளியை மேம்படுத்தி ஒவ்வொரு பள்ளியையும் பிஎம்ஸ்ரீ பள்ளியாக மாற்றுவோம்’’ என அவர் பேசினார்.

MUST READ