spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்முதலமைச்சர் மத்திய அரசிடம் நிதி பெறுவதில் அக்கறை காட்டாதது ஏன் ? - ஓபிஎஸ்

முதலமைச்சர் மத்திய அரசிடம் நிதி பெறுவதில் அக்கறை காட்டாதது ஏன் ? – ஓபிஎஸ்

-

- Advertisement -

முதலமைச்சர் மத்திய அரசிடம் நிதி பெறுவதில் அக்கறை காட்டாதது ஏன் ? - ஓபிஎஸ்

அரசு  விழாக்களை நடத்துவதில் செலுத்திய அக்கறையை, சமக்ரா சிக்‌ஷா திட்ட நிதியை பெறுவதிலும் முதலமைச்சர்

we-r-hiring

தமிழகத்துக்கு உரிய சமக்ரா சிக்‌ஷா திட்ட நிதியை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கல்வியின் தரத்தை மேம்படுத்துவதையும், சமமான மற்றும் தரமான கல்வியை அளிப்பதையும், வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, மத்திய அரசின் உதவியோடு செயல்படுத்தப்படுகிற திட்டமாக சமக்ரா சிக்‌ஷா திட்டம் விளங்குகிறது.

2025 பொங்கல் பரிசுத்தொகுப்பு… கண்காணிக்க குழு அமைத்தது தமிழக அரசு!

இந்தத் திட்டத்தின்கீழ், 3,586 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதில் 60 விழுக்காடு பங்கான ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டுமென்றும், இதற்கு தொடர்புடைய கருத்துக்களை ஏப்ரல் 2024 ஆம் ஆண்டிலேயே மத்திய அரசுக்கு அனுப்பியும், முதல் தவணையான 573 கோடி ரூபாய் இன்னும் மத்திய அரசால் விடுவிக்கப்படவில்லை என்றும், இது தவிர முந்தைய ஆண்டில் விடுவிக்கப்பட வேண்டிய 249 கோடி ரூபாயும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்படாததற்கு காரணம், தேசியக் கல்விக் கொள்கையின்கீழ் வரும் பி.எம். ஸ்ரீ (PM SHRI) பள்ளிகளை திறக்காதது என்றும் கூறப்படுகிறது. நடைமுறையில் உள்ள சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் நிதியைப் பெற வேண்டுமானால் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை தற்போது மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டத்திற்கு புதிய நிபந்தனையை விதிப்பது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கல்வி பயின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனவும் இது குறித்து, முதலமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தாலும், இது ஒரு காலந்தாழ்ந்த நடவடிக்கைதான் என தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிந்த உடனேயே மத்திய கல்வித் துறை அமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோரை நேரில் சந்தித்து இதில் உள்ள நிலையை விளக்கியும், தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மூலம் இது குறித்த உண்மை நிலையை மத்திய அரசு உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தும், இந்தத் திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், திமுக அரசு இதனைச் செய்ய தவறிவிட்டது. பல்வேறு அரசு விழாக்களை நடத்துவதில் செலுத்திய அக்கறையை, சமக்ரா சிக்‌ஷா திட்ட நிதியை பெறுவதிலும் முதலமைச்சர் செலுத்தியிருந்தால், இந்நேரத்தில் அதற்கான நிதியை பெற்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மாணவ, மாணவியரின் கல்வி மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை கருத்தில் கொண்டு, சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின்கீழ் வழங்க வேண்டிய நிதியை உடனடியாக அளிக்க மத்திய அரசு முன் வரவேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

MUST READ