spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுடிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் ரசிகர்கள் - சேப்பாக்கம்

டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் ரசிகர்கள் – சேப்பாக்கம்

-

- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் டிக்கெட் வாங்க இரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாட்டு மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க ஏராளமான நள்ளிரவு முதல் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மும்பையில் நேற்று(17.03.2023) நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வெற்றி பெற்றது.

we-r-hiring

இரண்டாவது போட்டி நாளை(19.03.2023) விசாகப்பட்டினத்தில் நடைபெறும் நிலையில் மூன்றாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது.

சென்னையில் நடைப்பெறும் மூன்றாவது போட்டிக்கான நேரடி டிக்கெட் முன்பதிவு இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஒருவருக்கான டிக்கெட் குறைந்தபட்ச டிக்கெட் விலை 1200-ராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்பதிவு செய்வதற்காக நள்ளிரவு முதல் சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் நீண்ட வரிசைகளில் கால் கடுக்க காத்திருக்கின்றனர்.

முன்பதிவு செய்வதற்காக இரவு முதல் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக ரசிகர்கள் காத்திருந்து வரும் நிலையில் டிக்கெட் விநியோகத்தை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

MUST READ