Homeசெய்திகள்விளையாட்டுமார்ச் 22- ஆம் தேதி தொடங்குகிறது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்!

மார்ச் 22- ஆம் தேதி தொடங்குகிறது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்!

-

 

சென்னை அணியை சமாளிக்குமா நடப்பு சாம்பியன் குஜராத்!
Photo: IPL

2024- ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைது

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரு மார்ச் 22- ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றனர். தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வே

இந்த நிலையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக கடந்த ஆண்டு செயல்பட்ட ஏடன் மார்கன், இந்த சீசனுக்கான கேப்டன் பதவியில் இருந்து மாற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஏலத்தில் 4 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ் கேப்டனாக செயல்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ