Homeசெய்திகள்விளையாட்டுடிம் சவுதியின் வேகத்தில் சுருண்டது உகாண்டா அணி!

டிம் சவுதியின் வேகத்தில் சுருண்டது உகாண்டா அணி!

-

உகாண்டா அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்தநிலையில் இன்று காலை (இந்திய நேரப்படி) நடைபெற்ற 32வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன் தலைமையிலும் உகாண்டா அணியானது பிரைன் மசாபா தலைமையிலும் களம் கண்டன. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ்சில் உள்ள பிரைன் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து உகாண்டா அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரொனக் பட்டேல் 2 ரன்களிலும் சிம்ரன் சீசாய் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் டக் ஆகி வெளியேறினர். அணியின் அதிகபட்சமாக கென்னத் வைஷ்வா 11 ரன்கள் எடுத்தார். இறுதியில் அணியானது 18.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 40 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. பந்துவீச்சு தரப்பில் டிம் சவுதி 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் 41 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பின் ஆலேன் 9 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் களமிறங்கி அதிரடியாக விளையாடிய டெவோன் கான்வே 22 ரன்களிலும் ரச்சின் ரவீந்திரா 1 ரன்களிலும் களத்திலிருந்தனர். இறுதியில் அணியானது 5.2 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டுகள் இழந்து 41 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் ஆட்டநாயகனாக டிம் சவுதி தேர்வு செய்யப்பட்டார்.

 

 

MUST READ