Homeசெய்திகள்விளையாட்டுராஜஸ்தான்vsலக்னோ ஆட்டம் தொடங்கியது - ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்க்!

ராஜஸ்தான்vsலக்னோ ஆட்டம் தொடங்கியது – ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்க்!

-

 

ராஜஸ்தான்vsலக்னோ அணிகள் மோதும் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. இதுவரை மூன்று லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய நிலையில், சென்னை அணி வெற்றி பெற்றது. நேற்று இரண்டு லீக் போட்டிகள் நடந்தன. டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதேபோல் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மல்லுக்கட்டின. இப்போட்டியில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இன்று மாலை. பிற்பகல் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.

MUST READ