Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவள்ளூர் அருகே ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய ரவுடிகள்

திருவள்ளூர் அருகே ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய ரவுடிகள்

-

திருவள்ளூர் அருகே ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய ரவுடிகள்

திருவண்ணாமலை மாவட்டம் மேல் சீசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (31). இவர் திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் பகுதியில் எம்.எம் என்ற துரித உணவகம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் கடைக்கு வந்த இருவர் சிக்கன் ரைஸ் இரண்டை கேட்டு சாப்பிட்டு விட்டு பணம் தராமல் உணவகத்தை விட்டு நகர்ந்துள்ளனர்.

அப்போது உணவக உரிமையாளர் ரஞ்சித் குமார் அவர்களிடம் பணம் கேட்டதற்கு
பணம் தர மறுத்துவிட்டு, நாங்கள் பெரிய ரவுடி எங்களிடம் பணம் கேட்பயா நாங்கள் பெரிய குப்பம் மனோஜ் கூட்டாளிகள் என கூறி ரஞ்சித் குமாரை கைகளால் மற்றும் இரும்பு ராடால் அடித்து கல்லாப்பெட்டியில் இருந்த 500 ரூபாயை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

இது தொடர்பாக ரஞ்சித் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த  அபிமன்யூ (26 ) பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (26) ஆகிய இருவரை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

MUST READ