spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபெண்கள் பாதுகாப்பு-உதவி எண்கள் காவல் துறை அறிவிப்பு;

பெண்கள் பாதுகாப்பு-உதவி எண்கள் காவல் துறை அறிவிப்பு;

-

- Advertisement -

இரவில் பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும் பெண்கள் இனி கவலை பட தேவையில்லை.இப்படி பட்ட பெண்களின் பாதுகாப்பிற்கென்றே காவல் துறை புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என கருதும் பெண்கள் இனி கவலை பட வேண்டாம்.காவல் துறையின் எண்களான 1091,112,004-23452365 மற்றும் 044-28447701 ஆகிய எண்களை அழைக்கலாம் எனவும்,இது ஒரு கட்டணமில்லா அழைப்பு என்றும்  தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக டிஜிபி அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு;

“பெண்கள் பாதுகாப்புக்கென தமிழக காவல் துறை புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.  இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என கருதும் பெண்கள் , காவல் துறையின் எண்களான 1091,112,004-23452365 மற்றும் 044-28447701 ஆகிய எண்களை எந்த நேரத்திலும் தொர்பு கொள்ளலாம் என கூறியுள்ளது.காவல் ரோந்து வாகனம் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்.இந்த சேவையை பெண்கள் பயன்படுத்தி பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்”, என டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

MUST READ