Homeசெய்திகள்தமிழ்நாடு11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

-

- Advertisement -

 

11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!
File Photo

தமிழகத்தில் இன்று (மே 19) மதியம் 02.00 மணியளவில் 11- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டத் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு!

தேர்ச்சிப் பெற்றவர்களில் 94.36% மாணவிகளும், 86.99% மாணவர்களும் ஆவர். மாணவர்களை விட 7.37% மாணவிகளே கூடுதலாகத் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 84.97% அரசுப் பள்ளிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளன. 93.20% அரசு உதவிபெறும் பள்ளிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளன.

அதிகபட்சமாக கணக்குப் பதிவியலில் 995 பேர் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மொழிப் பாடமான தமிழில் 9 பேரும், ஆங்கிலத்தில் 13 பேரும் 100- க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். கணினி அறிவியலில் 940 பேரும், கணினிப் பயன்பாடுகளில் 598 பேரும், இயற்பியலில் 440 பேரும் 100- க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் 96.38%- த்துடன் பெற்று முதலிடமும், ராணிப்பேட்டை 82.58%- த்துடன் பெற்று கடைசியிடம் பிடித்துள்ளது.

ஆட்சியமைக்க உரிமைக் கோரிய சித்தராமையா, டி.கே.சிவக்குமார்!

tnresults.nic.in என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ