- Advertisement -
தமிழக மீனவர்கள் 17 பேர் விடுதலை- இலங்கை நீதிமன்றம் உத்தரவு
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழக கடலோர பகுதிகலான ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 14ஆம் தேதி மீன் பிடிக்க சென்று நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மூன்று விசைப்படகுகளில் இருந்த 17 மீனவர்களை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தது.
இதையடுத்து மீனவர்களுடைய சிறைக் காவல் இன்று முடிந்த நிலையில் 17 மீனவர்களையும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் மீனவர்களை விசாரணை நடத்திய நீதிபதி 17 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விடுதலை செய்யப்பட்டுள்ள எட்டு பேர் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்களும் ஒன்பது பேர் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.