தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024- 2025 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்.19) காலை 10.00 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்றினார்.
அரசுத்துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன? எப்போது நிரப்பப்படும்?- ஓபிஎஸ் கேள்வி
அபபோது, சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, “அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூபாய் 230 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்களில் ரூபாய் 100 கோடியில் திருப்பணிகள் நடைபெறும். பள்ளிவாசல்கள், தேவாலயங்களில் புனரமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். விபத்து நடந்து 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்ச வரம்புத் தொகை ரூபாய் 2 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சந்தித்த பேரிடர்களுக்கான நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை.
அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும்; ஜூன் மாதத்திற்குள் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும்; இதுவரை 60,567 பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூபாய் 665 கோடியில் 14 புறவழிச்சாலைகள் மற்றும் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும். 6- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூபாய் 1,000 வழங்கப்படும்.
45 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளை நாம் உயர்த்த ரூபாய் 3,014 கோடி மதிப்பில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். கீழடி உட்பட 8 இடங்களில் அகழாய்வுப் பணியை மேற்கொள்ள ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூபாய் 20,196 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.