தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இன்று (டிச.19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மாவட்டங்களை திணறடிக்கும் வெள்ளம்… மீட்புப் பணியில் உதயநிதியுடன் மாரி செல்வராஜ்…
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய ஏழு மாவட்டங்களிலும் இன்று (டிச.19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சூப்பர் ஸ்டார் பட்டத்தில் என்ன பெருமை இருக்கிறது…. வைரலாகும் பிரபல நடிகையின் பேச்சு!
தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் டிசம்பர் 22- ஆம் தேதி முதல் டிசம்பர் 25- ஆம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும். சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்; ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.