தூத்துக்குடியில் முதல் முறையாக 904 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த சிப்காட் நிறுவனம் டெண்டர் கோரியது .
சென்னை போன்ற பெருநகரங்களில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, சென்னையில் நெம்மேலி, மீஞ்சூர், பேரூர் ஆகிய இடங்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
முதல் முறையாக சென்னைக்கு வெளியே வேறு மாவட்டங்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் செயல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, தூத்துக்குடியில் முதல் முறையாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், முல்லக்காடு கிராம பகுதியில் ரூ.904 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க சிப்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அரசு தனியார் பங்களிப்பு முறையில் அமைக்க இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது.