Homeசெய்திகள்தமிழ்நாடுஒரு குட் நியூஸ்…ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்க 3 மாதம் அவகாசம்..

ஒரு குட் நியூஸ்…ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்க 3 மாதம் அவகாசம்..

-

- Advertisement -

ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை மத்திய அரசு கூறியுள்ளது.இது பெரும்பாலான மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் தேதியினை மீண்டும் நீட்டித்துள்ளது.ஆதார் எண்ணை இணைக்க 2023 ஜீன்  மாதம் 30 தேதி வரை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அரசாங்கம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.அதாவது ஆதார் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி 2023 செப்டம்பர் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.அத்தகவலில்,இப்போது ரெஷன் ஆதாருடன் இணைக்கும் கடைசி தேதி செப்டம்பர் 30 என அறிவித்துள்ளது.ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகள் வைத்திருப்போர்களை கட்டுப்படுத்தவே இந்த முறையினை அரசாங்கம் தொடங்கியுள்ளது நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றே.இதன் மூலம் மோசடிகள் மற்றும் முறைக்கேடுகள் தடுக்கப்படுகின்றன என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் ரேஷன் கார்டை ஆதாருன் இணைப்பதால் ,அதன் பிறகு நிர்ணயிக்கப்பட்ட அளவு பொருட்களை மட்டுமே வாங்க முடியும்.அதிகமாக பொருட்களை வாங்க முடியாது என்பதை அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.இதனால் யாரும் தவறு செய்ய முடியாது.மேலும் ஏழைகள் மட்டுமே மானியத்தில் உணவு பொருட்களை பெற முடியும்.இதற்காகவே  இம்முறையினை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா காலக்கட்டத்தில் ரேஷன் கார்டின்மூலம் இலவசமாக  பொருட்கள் விநியோகப்படுத்தப்பட்ட நிலையில் ஏழை ,எளிய மக்கள் பசியின்றி உணவு உண்ணமுடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பது  நமது கடமையாகும்.

ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதால் உங்களுடையே அங்கீகாரத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டியது உங்களையுடைய பொறுப்பாகும்.ஆதலால் அனைவரும்  குறிப்பிட்ட தேதிக்குள் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைத்திடுங்கள்

MUST READ