spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசுவற்றில் ஏறி தேங்காய் பறிக்க முயன்ற நபர் : மின்வயரை மிதித்ததால்

சுவற்றில் ஏறி தேங்காய் பறிக்க முயன்ற நபர் : மின்வயரை மிதித்ததால்

-

- Advertisement -

தேங்காய் பறிக்கும்போது மின்சாரம் தாக்கி துடிதுடித்து இறந்த நபர். பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்.சுவற்றில் ஏறி தேங்காய் பறிக்க முயன்ற நபர் : மின்வயரை மிதித்ததால் விபரீதம்

சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்/53 வயது நிரம்பிய இவர் தனது வீட்டின் அருகே இருந்த தென்னை மரத்தில் தேங்காய்களை பறிக்க முயன்றார். சுவற்றின் மீது ஏறி தேங்காய்களை பறித்த போது எதிர்பாராத விதமாக அருகே சென்ற மின் வயரை மிதித்தார். உடனே மின்சாரம் பாய்ந்து துடிதுடித்த அவரை அருகில் இருந்தவர் கட்டையால் தள்ளி காப்பாற்ற முயன்றார். இருப்பினும் அதற்குள் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததால் குணசேகரன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பத்தூர் போலீசார் அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் வளத்தையும், வரலாற்றையும் அழிக்க முயற்சிக்கும் மோடி அரசு – சு.வெங்கடேசன் எம்பி

we-r-hiring

MUST READ