Homeசெய்திகள்தமிழ்நாடுஆதிதிராவிடர் வீட்டு வசதி திட்டத்தில் கடன் பெற்றவர்கள் அசல் தொகையை செலுத்தினால் வட்டி, அபராத வட்டி...

ஆதிதிராவிடர் வீட்டு வசதி திட்டத்தில் கடன் பெற்றவர்கள் அசல் தொகையை செலுத்தினால் வட்டி, அபராத வட்டி ரத்து – சென்னை கலெக்டர் அருணா தகவல்.  

-

- Advertisement -

ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர்  வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தின்கீழ் கடன் பெற்றவர்கள் அசல் தொகை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தளளுபடி செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர் வீட்டு வசதி திட்டத்தில் கடன் பெற்றவர்கள் அசல் தொகையை செலுத்தினால் வட்டி, அபராத வட்டி ரத்து - சென்னை கலெக்டர் அருணா தகவல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தின்கீழ் 1990-91 முதல் 2011-12 ஆண்டு வரை கடன் உதவி பெற்ற பயணாளிகள் அசல் தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தின்கீழ் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று வழங்கப்படும். எனவே, இந்த கடன் நிதி உதவி திட்டத்தின் கடன் உதவி பெற பயனாளிகள், அசல் தொகையினை செலுத்தி பயன்பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டம் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை செயல்படுத்தப்படும்.

MUST READ