

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்துப் பேசினார்.
ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கும் தி.மு.க., அ.தி.மு.க.!
இன்று (மார்ச் 10) காலை 11.30 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்துப் பேசினார்.
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக தேர்தல் பணிக்கான “வார் ரூம்” திறப்பு!
இந்த சந்திப்பின் போது, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர். சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க வலியுறுத்தி ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார்.
