Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை வரும் அனைத்து பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க அறிவுறுத்தல்

சென்னை வரும் அனைத்து பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க அறிவுறுத்தல்

-

- Advertisement -

வெளியூர்களில் இருந்து சென்னை வரும் அனைத்து பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது கழக பேருந்துகளில் சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக அனைத்து ஊர்களிலிருந்து சென்னைக்கு வந்தடையும் பேருந்துகள் அனைத்தும் தாம்பரம் வழியாக இயக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தாம்பரம் மாநகர பேருந்து நிறுத்த Shed- க்கு தள்ளி இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கி விட அனைத்து ஓட்டுனர், நடத்துனர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

we-r-hiring

இதன் மூலம் தாம்பரம், குரோம்பேட்டை, ஆசர்கானா. வடபழனி செல்லும் பயணிகள் பயன் அடைவதுடன் நமது கழகத்திற்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். மேலும் மாலை 05.00 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னைக்கு வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் சுங்கசாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ