Homeசெய்திகள்தமிழ்நாடுமேகதாது விவகாரம் குறித்து தமிழக காங்கிரஸ் வாயை திறக்கவில்லை: அண்ணாமலை

மேகதாது விவகாரம் குறித்து தமிழக காங்கிரஸ் வாயை திறக்கவில்லை: அண்ணாமலை

-

மேகதாது விவகாரம் குறித்து தமிழக காங்கிரஸ் வாயை திறக்கவில்லை: அண்ணாமலை

மேகதாது விவகாரம் குறித்து தமிழக காங்கிரஸ் வாயை திறக்கவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

"என் மேல் மேலும் ஒரு அவதூறு வழக்கு போடுங்கள்"- அண்ணாமலை பேட்டி!
Photo: ANI

தூத்துக்குடியில் கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள உலக புகழ்பெற்ற பேராலயங்களில் ஒன்றான பனிமய மாதா பேராலயத்திற்கு சென்றார். அங்கு அவரை பங்குதந்தை குமாரராஜா வரவேற்றார். பின்னர் மெழுகுவர்த்தியை காணிக்கையாக வழங்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிராத்தனை மேற்கொண்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “மேகதாதுவில் அணை கட்டுவதை கர்நாடகாவிலேயே எதிர்த்தேன். கர்நாடகாவுக்கு சென்றே மேகதாது அணைக்கு எதிராக நான் பேசினேன். மேகதாது அணை கட்டுவது உறுதி என டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் பின்வாங்கப் போவதில்லை என டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். டி.கே.சிவக்குமாரின் கருத்துக்கு தமிழக காங்கிரஸிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. மேகதாது அணை கட்டப்படுவதை எங்களால் தடுத்து நிறுத்த முடியும். கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மரியாதை தரப்படவில்லை” எனக் கூறியுள்ளார்.

 

MUST READ