Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

-

- Advertisement -

 

சென்னை பல்கலைக்கழகத் தேர்வு தேதி அறிவிப்பு!
Photo: University Of Madras

சுமார் 424 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தவில்லை எனக்கூறி சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. இதனால் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் கூட வழங்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போதை விழிப்புணர்வு குறித்து பெண் காவலர் பாடிய பாடல் வைரல்!

சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் இல்லாத நிலையில், உயர்கல்வித்துறைச் செயலாளர் தலைமையிலான குழு நிர்வகித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சென்னை பல்கலைக்கழகத்தில் வருமான வரி முறையாக செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. அதன்படி, 424 கோடியே 67 லட்சத்து 56 ஆயிரத்து 780 ரூபாய் வருமான வரி நிலுவைத் தொகை செலுத்தப்படாமல் உள்ளது.

இந்த வரியை வசூலிக்கும் முனைப்பில் பாரத ஸ்டேட் வங்கி, சென்னை பல்கலைக்கழகத்திற்கு இருக்கும் 37 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. வருமான வரித்துறையின் அறிவுறுத்தலின் பேரில், பல்கலைக்கழக வங்கிக் கணக்குகளை பாரத ஸ்டேட் வங்கி முடக்கியுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் நிதிக்கு வருமான வரி செலுத்தப்பட வேண்டும்; அவகாசம் வழங்கியும் வருமான வரியை செலுத்த பல்கலைக்கழக நிர்வாகம் தவறிவிட்டதாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியுள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு இறுதியில் மூன்றாவது முறையாக வருமான வரித்துறை சார்பில் அறிவுறுத்தல் கடிதம் அளிக்கப்பட்டும், அதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

565 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் நாசர்!

இந்த வங்கிக் கணக்குகள் மூலமாக தான் பல்கலைக்கழகத்தின் நிதி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் பணியாற்றும் 200 பேராசிரியர்கள், 400 பணியாளர்களுக்கு ஊதியமும், 1,400 பேருக்கு ஓய்வூதியமும் வங்கிக் கணக்குகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

565 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் நாசர்!

மின் கட்டணம், பெட்ரோல் நிரப்புதல் போன்றவைகளுக்கும் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகள் தேவையானதாக உள்ளது. வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் பணப்பரிவர்த்தனைகள் எதையுமே மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

MUST READ