![பா.ஜ.க. நிர்வாகியை கைது செய்தது காவல்துறை!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/07/bjp8999-1-1.jpg)
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக கடலூர் மாவட்டச் சேர்ந்த நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், கீரப்பாளையத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், பா.ஜ.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் நிர்வாகியாக உள்ளார். இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக நெல்லை மாவட்ட காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில், கடலூர் விரைந்த நெல்லை மாவட்ட காவல்துறையினர், கீரப்பாளையத்தில் வைத்து ஜெயக்குமாரை கைது செய்து, நெல்லை மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி!
பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயக்குமார் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.