Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர் மாளிகை முன் முற்றுகை போராட்டம் –காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கைது

ஆளுநர் மாளிகை முன் முற்றுகை போராட்டம் –காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கைது

-

- Advertisement -

அம்பேத்கரை பாஜகவும் ஆர் எஸ் எஸ்சும் தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள். உலக நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பிரதமர் மோடி ஏன் மணிப்பூர் செல்லாமல்  இருக்கிறார் எனவும், அதானி மீது அந்திய நாடுகள் நடவடிக்கை எடுக்கும் போது இந்தியா மட்டும் ஏன் மறுக்கிறது எனவும் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கைது.ஆளுநர் மாளிகை முன் முற்றுகை போராட்டம் –காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கைது

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குறிப்பாக சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அமெரிக்கா நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதானியின் ஊழல் மோசடிகள் குறித்தும் மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரதமர் நேரில் சென்று சந்திக்காதது குறித்தும் நாடாளுமன்றத்தில் அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறுவுறுத்தலின் படி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டமானது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது.

இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து இருந்தது. பின்னர் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தின் மேடையில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ,அதானி  இந்திய அதிகாரிகளுக்கு எத்தனை ஆயிரம் கோடிகளை லஞ்சமாக கொடுத்துள்ளார். அதானி  தொழில் எந்த விதத்தில் நடந்து கொண்டிருக்கிறது , அதானி தொழில் நியாயமான முறையில் நடக்கிறதா, எத்தனை அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்துள்ளார் என்பது குறித்து கேள்வி எழுப்பினாா்.

மத்திய அரசு அதானி என்ற ஒற்றை நபருக்காக தேசத்தை அடகு வைக்கிறது. பங்குச்சந்தை ஊழலுக்கு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். அதானி பெரிய ஊழல் நடத்தியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்கா கூறி உள்ளது. அந்நிய நாடுகள் சொல்லும் போது ஏன் இந்தியா மறுக்கிறது, இந்தியா முழுவதும் உள்ள அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்து அதானி தொழிலை நடத்தி வருகிறார்.

உலக நாடுகளுக்கெல்லாம் சுற்றுலா செல்லும் பாரத பிரதமர் மணிப்பூர் செல்லாததற்கான காரணம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மணிப்பூர் இந்தியாவின் மாநிலம் தானே? தமிழக அரசு நிதி கேட்டால் கொடுக்க மறுக்கிறீர்கள். தமிழக அரசு கொடுக்கும் வரி பணத்தில் எங்கள் பங்களிப்பை தாருங்கள் என்றால் மறுக்கிறீர்கள். தமிழ்நாட்டின் உரிமையை, மாநிலத்திற்கான சுயாட்சியை பேசுங்கள் என்றால் மத்திய அரசு பேச மறுக்கிறார்கள்.

கைது முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை  கூறுகையில் அதானி ஊழலை கண்டித்தும், மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

சாதாரண மனிதர்கள் தவறு செய்தால் சிபிஐ, வருமானவரித்துறை என சோதனைகள் செய்கிறார்கள். ஆனால் அதானி மீது இத்தனை குற்றச்சாட்டுகள் இருந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? என கூறினார். அதானி மீதான குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்பேத்கரை, பாஜகவும் , ஆர் எஸ் எஸ்சும் தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள் என தெரிவித்தார்.

அம்பேத்கருடைய பிறந்தநாள் மற்றும் நினைவு நாள்களில் அவருடைய திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியவர்கள் மக்களவையில் அம்பேத்கர் பற்றி பேசினால் இவர்களுக்கு பிடிப்பதில்லை இதுதான் பாசிச பாஜக அரசு. இதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் வைத்துள்ளனர்.

சென்னை வந்த அதானி ரகசியமாக யாரை சந்தித்தாா் ?  அறப்போர் இயக்கம் ஜன-5ல் ஆர்ப்பாட்டம்

 

MUST READ