- Advertisement -
20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாம் என தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மார்ச் வரை 19 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்கொள்முதலுக்கு அனுமதி தந்த நிலையில் ஒரு சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பருவம் தவறிய மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்க வேண்டுமென ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
