வரும் மே 07- ஆம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. வரும் மே 05, 06 ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் மே 07- ஆம் தேதி தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, சேலம், ஈரோடு, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வரும் மே 07- ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 04, 05 ஆம் தேதிகளில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும்.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 40 டிகிரி செல்ஸியஸை ஒட்டியே இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.