- Advertisement -
மீண்டும் அதிர்ச்சி தந்த தங்கம் விலை!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து கிடுகிடுவென உயருவதால் நகைப்பிரியர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ஒட்டுமொத்தமாக தங்கத்தின் தேவை 135.5 டன்களாக இருந்தது. இந்த அளவு தற்போது 17 சதவீதம் குறைந்து 112.5 டன்களாக உள்ளது. விலை சரிவை எதிர்பார்த்து பல்வேறு தரப்பினரும் தங்கத்தில் முதலீடு செய்வதை ஒத்திவைத்ததால் தேவையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,600-க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.79.70க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிலோ ரூ.79,700-க்கு விற்பனையாகிறது.