
பெருநகர சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோரை நியமனம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.
சந்தீப் ராய் ரத்தோர் யார்?- விரிவாகப் பார்ப்போம்!
தமிழக காவல்துறைத் தலைவராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டதை அடுத்து, பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு கேடர் 1992 – ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான சந்தீப் ராய் ரத்தோர் டெல்லி மாநிலத்தைச் சேர்ந்தவர்.
“ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; சட்ட ரீதியாகச் சந்திப்போம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
கடந்த 1977- ஆம் ஆண்டு முதல் 1987- ஆம் ஆண்டு வரை குவைத் நாட்டில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். கடந்த 1992- ஆம் ஆண்டு முதல் 1996- ஆம் ஆண்டு வரை பரமக்குடி மற்றும் நாகர்கோவில் துணை காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். கடந்த 1998- ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகள் பிடிபட்ட போது, அம்மாநகர துணை ஆணையராக இருந்தவர்.
அதைத் தொடர்ந்து, கடந்த 1999- ஆம் ஆண்டு முதல் 2001- ஆம் ஆண்டு வரை மாநில போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவராகவும், பெருநகர சென்னை காவல்துறைப் போக்குவரத்துத் துணை ஆணையராகவும் செயல்பட்டவர். மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றிலும் பணிச் செய்துள்ளார்.
கடந்த 2019- ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் கூடுதல் காவல்துறை இயக்குநராக உள்ளார்.
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி தமிழக ஆளுநர் உத்தரவு!
கடந்த 2008, 2015 ஆம் ஆண்டுகளில் சிறந்த சேவைக்காக குடியரசுத் தலைவரின் பதக்கம் பெற்றவர். 2002- ஆம் ஆண்டு உலக அமைதிக்கான சிறப்புக் காவல்படையில் பங்கேற்று பதக்கம் வென்றவர். பிரெஞ்ச், ஆங்கிலம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசக் கூடியவர்.