spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசிதம்பரம் அருகே பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் பூரான் - 24 மாணவர்களுக்கு வாந்தி,...

சிதம்பரம் அருகே பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் பூரான் – 24 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

-

- Advertisement -

சிதம்பரம் அருகே பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் பூரான் இருந்ததில் அந்த உணவை சாப்பிட்ட 24 மாணவர்களுக்கு வாந்தி, மய்க்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

we-r-hiring

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது வரகூர்பேட்டை கிராமம். இங்கு அரசு ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் மாணவியர்கள் வழக்கம்போல் மதிய உணவு சாப்பிட்டனர். அப்போது சத்துணவு ஊழியர்கள் மதிய உணவு பாத்திரத்திற்குள் உள்ளே பூரான் ஒன்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சத்துணவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் சாப்பிடாத மாணவர்களிடம் யாரும் உணவு சாப்பிட வேண்டாம் என்று கூறினர்.

இதனையடுத்து சற்று நேரத்தில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு லேசான மயக்கமும், தலை சுற்றலும் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்களை ஆட்டோ மூலமும், 108 ஆம்புலன்ஸ் மூலமும் கொண்டு சென்று சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் 24 மாணவ, மாணவிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி மற்றும் போலீசார் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வருவாய்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். பள்ளியில் சமைக்கப்பட்ட மதிய உணவில் பூரான் விழுந்தது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

MUST READ