Homeசெய்திகள்தமிழ்நாடு"தூர்வாரும் பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவு"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

“தூர்வாரும் பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

-

 

"தூர்வாரும் பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவு"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
Photo: TN Govt

தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்டப் பகுதிகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “95% தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளது; எஞ்சிய பணிகளும் ஓரிரு நாட்களில் முடிவடையும். மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதற்கு முன்பாக தூர்வாரும் பணி சிறப்பாக முடிக்கப்படும். விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நெல் உற்பத்தியில் சாதனைப் படைப்பார்கள் என நம்புகிறேன்.

வாய்க்கால் பராமரிப்பு பணி – கரூர் மாவட்ட கலைக்டர்

சென்ற ஆண்டுகளில் நாம் சாதித்துக் காட்டியதைப் போலவே இந்தாண்டும் செய்துக் காட்டுவோம். தமிழக ஆளுநர் பல மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளதால் நீதிமன்றத்தை நாட சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினோம். அமுல் நிறுவனம் தமிழகத்திற்கு வருவதை உறுதியாக எதிர்க்கிறோம். விவசாயிகளுக்கு அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. உழவர்களுக்கு கடன் மற்றும் இடுபொருட்கள் வழங்குவதும் நடந்து முடிந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அனுமதியில்லை- சிவசங்கர்

இந்த நிகழ்வின் போது, தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

MUST READ