Homeசெய்திகள்தமிழ்நாடுடெல்டா மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு!

டெல்டா மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு!

-

 

தமிழகத்தின் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று (ஜன.19) லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உங்களுடன் சமமாக நடிக்க ஆசை… சத்யராஜை நெகிழவைத்த விஜய் சேதுபதி…

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும், நாளையும் (ஜன.20) தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. ஜனவரி 21- ஆம் தேதி முதல் ஜனவரி 25- ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

விஜயகாந்த் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி… தேமுதிக தலைமை அறிவிப்பு…

சென்னை நகர மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது”. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

MUST READ