Homeசெய்திகள்தமிழ்நாடு"மக்களை ஏமாற்றும் தி.மு.க. அரசை வன்மையாகக் கண்டிக்கின்றேன்"- டிடிவி தினகரன் ட்வீட்!

“மக்களை ஏமாற்றும் தி.மு.க. அரசை வன்மையாகக் கண்டிக்கின்றேன்”- டிடிவி தினகரன் ட்வீட்!

-

 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சை நாயகனாக திகழ்வதாக அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான் டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கான மாத உதவித்தொகையை வெறும் ரூ.200 மட்டும் உயர்த்தி வழங்கி, வழக்கம்போல மக்களை ஏமாற்றும் தி.மு.க. அரசை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

பால்கனியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

2021- ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது தி.மு.க. வெளியிட்ட வாக்குறுதியில் முதியோர் மற்றும் கைம்பெண்கள் உதவித் தொகையை ரூபாய் 1000-லிருந்து ரூபாய் 1500 ஆக உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக பொய் வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது வெறும் ரூபாய் 200 மட்டும் உயர்த்தி ரூபாய் 1200 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

திருமுல்லைவாயில் மாற்றுத்திறனாளியை கரம்பிடித்த பிலிப்பைன்ஸ் மணமகள்

அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்களின் விலை தினந்தோறும் உயர்ந்து வரும் நிலையில் தற்போது அளிக்கப்பட்டு வரும் உதவித்தொகையே போதாத போது முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கான மாத உதவித்தொகையை ரூபாய் 200 மட்டும் உயர்த்துவது எந்தவகையிலும் நியாயம் ஆகாது. எனவே வாக்குறுதி அளித்ததைக் காட்டிலும் உதவித்தொகையை ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ