spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க.வின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்!

தி.மு.க.வின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்!

-

- Advertisement -

 

அமைச்சரவை மாற்றமா?- ஆளுநரைச் சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்!
File Photo

வரும் அக்டோபர் 22- ஆம் தேதி திருவண்ணாமலையில் தி.மு.க.வின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

we-r-hiring

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!

வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 13 தி.மு.க. மாவட்டங்களுக்கு புதிதாக வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்களின் பயிற்சி பாசறைக் கூட்டம் வரும் அக்டோபர் 22- ஆம் தேதி அன்று திருவண்ணாமலை மாவட்டம், மலப்பாம்பாடியில் நடைபெறவுள்ளது. இதில் முதலமைச்சரும், தி.மு.க.வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்ற உள்ளதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் திட்டம்- பயனாளிகள் சேர்ப்பு, தகுதியற்றவர்கள் நீக்கம்!

திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களின் தி.மு.க.வின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.

MUST READ