Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவது ஆளுநருக்கு அழகல்ல- துரைமுருகன்

அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவது ஆளுநருக்கு அழகல்ல- துரைமுருகன்

-

- Advertisement -

அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவது ஆளுநருக்கு அழகல்ல- துரைமுருகன்

திருப்பத்தூர் நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியேற்பு தொடர்பாக ஆளுநரின் பேச்சு கண்டனத்திற்குரியது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றமா?- ஆளுநரைச் சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்!
File Photo

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், “திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி குறித்து ஆளுநர் உண்மைக்கு மாறான தகவல்களைப் பேசியுள்ளார். ஆளுநர் குறிப்பிட்டு பேசிய ஊராட்சித்தலைவர், ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் அல்ல என்று நீதிமன்றமே கூறியுள்ளது. அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் ஆளுநர் பொறுப்பிலுள்ள ஆர்.என்.ரவி பேசியிருப்பது, பாஜக&ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர் போல் உள்ளது. தமிழ்நாட்டின் சமூகநீதியால் பிறந்துள்ள அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவது ஆளுநருக்கு அழகல்ல. தொடர்ந்து உண்மைக்கு மாறான கருத்துக்களை பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அவர் அரசியல் பேச விரும்பினால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் தலைவராக வந்து அரசியல் பேசட்டும். சிறப்பாக செயல்படும் தமிழக அரசை விமர்சிப்பதை ஆளுநர் தவிர்ப்பது நல்லது. உண்மைக்கு மாறாக பேசிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அரசியல் பேச வேண்டும் என்றால் அரசியல் தலைவராக மாறி தாராளமாக ஆளுநர் தன் கருத்தை தெரிவிக்கட்டும் அதற்கு பதிலடி கொடுக்க ஒட்டுமொத்த தமிழக மக்களுமே தயாராக இருக்கிறார்கள். சிறப்பாக சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிவரும் திராவிட மாடல் அரசை விமர்சிப்பதை ஆளுநர் தவிர்ப்பது நல்லது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

MUST READ