ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவு அளிப்பதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்பிற்கினிய முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் ஈரோடு மாவட்ட மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி உறவுகள் அனைவர்க்கும் வணக்கம்! ஈரோடு கிழக்கு தொகுதிக்கு (பிப்ரவரி 5-ஆம் தேதி) இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. தி.மு.க. சார்பில் சந்திரகுமார் அவர்கள் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
திராவிட மாடல் அரசின் மக்கள் வரவேற்பை யாவரும் அறிவர். திமுக ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களை ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின் வழியாக எடுத்துச் சென்றுள்ளோம். ஆகவே 5 ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்குரிய வாக்குப்பதிவில் நாம் கூட்டணி கட்சியாக அங்கம் வகிக்கும் திமுக வேட்பாளர் திரு சந்திரகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்து, மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது கரத்தை வலுப்படுத்த. மறவாது வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களைக் கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.