Homeசெய்திகள்தமிழ்நாடுஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்!

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் மாற்றப்பட்டு, புதிய தேர்தல் அலுவலராக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக மணீஷ் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட கர்நாடகாவை சேர்ந்த பத்மாவதி என்ற வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புனு பரிசீலனையின்போது அவரது மனு ஏற்கப்பட்டு இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 47 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

பின்னர் வேறு மாநில பெண்ணின் வேட்புமனு ஏற்கப்பட்டது தொடர்பாக புகார் எழுந்தது. இதனை அடுத்து, அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டு, மற்ற 46 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குளறுபடிகள் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி மணீஷ் மாற்றப்பட்டு புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்ரபான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது. இதனை தொடர்ந்து, ஸ்ரீகாந்த் தேர்தல் அதிகாரியாக முறைப்படி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள், கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

MUST READ