Homeசெய்திகள்தமிழ்நாடுமீன்பிடித்தபோது படகு மோதி மீனவர் உயிரிழப்பு

மீன்பிடித்தபோது படகு மோதி மீனவர் உயிரிழப்பு

-

கோடியக்கரை அருகே மீன்பிடித்தபோதுபடகு மோதி மீனவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

death

கோடியக்கரைக்கு தென்கிழக்கே நாகை மாவட்டம் செருதூரை சேர்ந்த ராஜேந்திரன், எல்லப்பன், முருகவேல் ஆகிய 3 மீனவர்களும் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த நாகை அக்கரப்பேட்டை சேர்ந்த அனிதா என்பவருக்கு சொந்தமான மற்றொரு விசைப்படகு மோதியதில் பைபர் படகு கடலில் முழ்கியது. படகு கடலில் மூழ்கிய தொடங்கியதும் மூன்று மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். மோதிய விசைப்படகு மீனவர்கள் இந்த மூன்று மீனவர்களையும் மீட்டனர். அப்போது ராஜேந்திரன் என்ற மீனவர் உயிரிழந்தார்.

உடனடியாக அருகே உள்ள கோடியக்கரை கடற்கரைக்கு ராஜேந்திரன் உடலை கொண்டு வந்து சேர்த்தனர்.வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரன் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். படகு மோதி மீனவர் உயிரிழந்த சம்பவம் மீனவர் கிராமங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ