Homeசெய்திகள்தமிழ்நாடுகடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் -  தேடும் பணி தீவிரம்

கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் –  தேடும் பணி தீவிரம்

-

- Advertisement -

கடலூர் அருகே கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் கடல் சீற்றம் காரணமாக படகில் இருந்து தவறி விழுந்து மாயம்; தேடும் பணி தீவிரம்.கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயமானார் -  தேடல் பணி தீவிரம்

கடலூர் மாவட்டம் சித்திரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன், ஜெகன், சேகர் ஆகிய மூன்று மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்பொழுது அவர்கள் சென்ற படகு கடல் சீற்றம் காரணமாக தூக்கி வீசப்பட்டது. இதில் ஜானகிராமன் மற்றும் சேகர் ஆகியோர் அதே படகை பிடித்து தப்பிய நிலையில் ஜெகன் படகில் இருந்து கீழே தவறி கடலில் விழுந்தார். ஜெகனை தேடிப்பார்த்த ஜானகிராமனும், சேகரும் கரைக்கு திரும்பி வந்து கிராம மக்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஜெகனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநில கடலோர காவல் படையினர் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து ஜெகனை தேடி வருகின்றனர். மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் மூழ்கி மாயமான சம்பவம் சித்திரை பேட்டை கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் 3வது நாளாக நீடிக்கும் மழை – பொதுமக்கள் அவதி

MUST READ