
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
வாழ்க்கையை மாற்றிய ராஞ்சனா… 10 வருடங்கள் நிறைவு… நெகிழ்ந்த தனுஷ்!
இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடிப்பதற்கான அனுமதி அட்டையை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பெற்றுக் கொண்டு, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது, நெடுந்தீவு அருகே மீனவர்கள் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அனிமல் படத்தின் ஷூட்டிங் ஓவர்….. படப்பிடிப்பு குறித்து ராஷ்மிகா வெளியிட்ட உருக்கமான பதிவு!
அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டியதாகக் கூறி, மூன்று விசைப்படகுகளைப் பிடித்தனர். அதில் இருந்த 21 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை அனைவரையும் காங்கேசன் துணைக் கடற்படை முகாமில் வைத்து கடற்படையினர் விசாரித்து வருகின்றனர்.