திரையுலகின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக கருதப்படும் தனுஷ் பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார்.
அந்த வகையில் இவர் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. மேலும் தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாலிவுட் திரை உலகில் ‘ராஞ்சனா ‘ மற்றும் ‘அட்ரங்கி ரே’ படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இயக்குனர் ஆனந்த் எல் ராயுடன் இணைந்து இருக்கிறார்.
‘தேரே இஸ்க் மேயின்’ (Tere Ishk Mein)என்று இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.கலர் எல்லோ ப்ரோடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமானின் இசையிலும் இப்படம் உருவாகயிருக்கிறது.
மேலும் இந்த படம் விமானப்படை கதைக்களத்தில் நடக்கும் காதல் கதையை பின்னணியாக கொண்டு உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகவுள்ள இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே இது சம்பந்தமாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ” ராஞ்சனாவின் 10 வருடங்கள், சில திரைப்படங்கள் நம் வாழ்க்கை முழுவதையும் மாற்றிவிடும். அப்படிப்பட்ட ஒரு படம் என்று சொல்வதே பொருத்தமானது. உண்மையில் நம் வாழ்க்கையை மாற்றி உள்ளது. ராஞ்சனா திரைப்படத்தை கிளாசிக்காக மாற்றியதற்காக ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.தற்போது ஒரு தசாப்தத்திற்கு பிறகு ராஞ்சனா உலகிலிருந்து ஒரு கதை Tere Ishk Mein. இதில் எந்த மாதிரியான பயணம் எனக்காக காத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் இது ஒரு சாகசமாக இருக்கும் என்று நான் உறுதியாக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.