டெல்லி சென்றுள்ள தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று (ஜன.04) மாலை 05.00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.
விஜய்யின் 68வது படத்தில் இணைந்துள்ள அஜித் பட நடிகை
அதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள இல்லத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி எம்.பி., சோனியா காந்தி எம்.பி. ஆகியோரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார்.
ரொம்ப மோசம்… பிரபல விமான நிறுவனம் மீது நடிகை மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு…
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்கக் கோரி, முதலமைச்சர் சார்பில் பிரதமரிடம் வலியுறுத்தினேன். ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன்; அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.