Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் அமைச்சர் மனைவிக்கு விதித்த சிறை உறுதி!

முன்னாள் அமைச்சர் மனைவிக்கு விதித்த சிறை உறுதி!

-

- Advertisement -

 

இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள்- பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்!
File Photo

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறை தண்டனையை உறுதிச் செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

காவி வேட்டியில் பேரவைக்கு வந்துள்ள ஓ.பன்னீர்செல்வம்!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரமசிவன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது மனைவிக்கு சிறை தண்டனையை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் பரமசிவன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 38 லட்சம் சொத்துச் சேர்த்து வழக்கில் நல்லம்மாளுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஓராண்டு சிறைத் தண்டனையையும், பரமசிவனுக்கு விதித்த இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் உறுதிச் செய்ததுடன், மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

அத்துடன், தண்டனையை அனுபவிக்க செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க, சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்”- மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்!

கடந்த 2000- ஆம் ஆண்டு விதித்த தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்தபோது, பரமசிவன் கடந்த 2015- ஆம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ