தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நாளை நடைபெறவுள்ளது. இந்த தேர்வை 13.89 லட்சம் பேர் எழுதவுள்ளனர்.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 3935 பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாய்வு மன்றம் (டிஎன்பிஎஸ்சி) நாளை (ஜூலை 12) போட்டித் தேர்வை நடத்துகிறது. இந்த போட்டி தேர்வு நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் இந்த போட்டித் தேர்வை 8 லட்சம் பெண்கள் உட்பட 13,89,000 பேர் எழுத உள்ளனர்.
இதில், ஆண்கள் 5,26,553 பேர், பெண்கள் 8,63,068 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 117 பேர் என மொத்தமாக பெரும் எண்ணிக்கையில் தேர்வர்கள் பங்கேற்கின்றனர். இந்த தேர்வு, மாநிலத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 314 மையங்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் பொறுத்த வரை 311 இடங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன என்றும், இதில் 94 ஆயிரத்து 848 பேர் பங்கேற்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்த தேர்வு பணியில் நான்காயிரத்து ஐநூறு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுகின்றனர். இதையொட்டி தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
குரூப் 4 தேர்வுக்கன வினாத்தாள்கள் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து மூடப்பட்ட கண்டெய்னர் வாகனங்களின் மூலம் எடுத்து செல்லப்படும். ஆனால் இந்த முறை தனியார் பஸ்களில் வினாத்தாள்கள் எடுத்து செல்லப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டி.என். பி.எஸ்.சி. தேர்வின் போது வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனியார் பஸ்களின் கதவு மற்றும் அவசர வழி கதவுகளுக்கு A4 சீட்டை ஒட்டி சீல்வைத்து வினாத்தாள்களை அனுப்பி வைத்தத சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனியார் பஸ்களில் எடுத்து செல்வதால் வினாத்தாள் கசிய வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்தி தேர்வர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, டிஎன்பிஎஸ் சி தலைவர்பிராபகர் கூறியதாவது:-, ” டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை; தேர்வர்கள் அச்சப்பட தேவையில்லை. தனியார் பேருந்துகள் மூலம் வினாத்தாளை எடுத்துசென்றது குறித்து விளக்கம் அளித்துள்ளாா்.