Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்பதிவில் புதிய உச்சம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் சாதனை..!!

முன்பதிவில் புதிய உச்சம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் சாதனை..!!

-

- Advertisement -
முன்பதிவில் புதிய உச்சம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் சாதனை..!!
தீபாவளி பண்டிகையை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பேருந்துகளில் இதுவரை இல்லாத அளவாக அதிகம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை ஓட்டி தமிழ்நாட்டில் மொத்தமாக 14 ஆயிரத்து 86 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து 11,176 பேருந்துகளும் மீதமுள்ள பேருந்துகள் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் இயக்கப்பட்டன. அக்டோபர் 28 முதல் 30-ம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்ப ஏதுவாக நேற்றைய தினம் 2,561 சிறப்பு பேருந்துகளுக்கு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் இதுவரை இல்லாத அளவு அதிகமான மக்கள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர்.

முன்பதிவில் புதிய உச்சம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் சாதனை..!!

இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “போக்குவரத்து துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கத்தில், தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர் தமிழகத்தின் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காகவும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காகவும் நேற்றைய தினம் 03.11.2024 ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, பிற இடங்களிலிருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 2,561 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கு வழக்கமாக இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 3,912 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

மேலும், நேற்று ( 03 /11/2024 ) மட்டும் 79,626 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இது முன்பதிவு செய்து பயணம் மேற்க்கொண்ட பயணிகள் எண்ணிக்கையின் அதிகபட்ச உச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ