Homeசெய்திகள்தமிழ்நாடுகனமழை எச்சரிக்கை - டெல்டா மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப்படை

கனமழை எச்சரிக்கை – டெல்டா மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப்படை

-

- Advertisement -

கனமழை எச்சரிக்கை - டெல்டா மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப்படைடெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, அரக்கணோத்தில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை 5 குழுக்கள் 5 மாவட்டங்களுக்கு மோப்பநாய்களுடன் விரைகிறது.

இன்று  காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகைக்கு தெற்கு, தென் கிழக்கில் 630 கிமீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கில் 830 கிமீ தொலைவிலும் நிலவுகிறது. இது மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் இது ஆழ்ந்த கற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதற்கிடையில் வேதாரண்யம் பகுதியில் 50 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கியுள்ளது.

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து கூடுதலாக 5 குழுக்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை, கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு தற்பொழுது தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 150 வீரர்கள் மற்றும் இரண்டு மோப்ப நாய்களுடன் வாகனங்கள் மூலமாக புறப்பட்டு சென்றுள்ளனர்.

வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. நாளை புயலாக மாறுகிறது..!!

MUST READ