தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே அனுமதியின்றி ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கிய விவகாரம் தொடர்பாக, காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன்- பிரபு மகள் திருமணம்…. திரண்டு வந்து வாழ்த்திய திரைப்பட பிரபலங்கள்!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை அடுத்த அம்பளச்சேரி கிராமத்தில் கடந்த டிசம்பர் 14- ஆம் தேதி அன்று ஹெலிகாப்டர் ஒன்று எவ்வித அனுமதியும் இன்றி, சட்டவிரோதமாகத் தரையிறங்கியது. மேலும், அந்த இடத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா கொடிகள் நடப்பட்டதுடன், அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆகியோரது புகைப்படங்கள் அடங்கிய விளம்பரப் பதாகைகளும் அமைக்கப்பட்டிருந்தனர்.
ஹெலிகாப்டர் சட்டவிரோதமாகத் தரையிறங்கிய விவகாரம் தொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சாத்தான்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அருள் தலைமையில் காவல்துறை அதிகாரிகள், ஹெலிகாப்டர் தரையிறங்கிய இடத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பார்க்கிங் பட வெற்றி விழா…. இயக்குனருக்கு பரிசளித்த ஹரிஷ் கல்யாண்…. என்னவென்று தெரியுமா?
ஹெலிகாப்டர் இந்த பகுதிக்கு ஏன் வந்தது? அதில் பயணித்தவர்கள் யார்? இங்கு எதற்காக வந்தனர்? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.