Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் மீது உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு!

அமைச்சர் மீது உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு!

-

 

"பட்டமளிப்பு விழாக்கள் தாமதம் ஏன்?"- அமைச்சர் பொன்முடி விளக்கம்!
Photo: Minister Ponmudy

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம்- கட்சிகளின் பலம் என்ன?

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை விடுவித்து, கடந்த ஜூன் மாதம் வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கை தாமாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி

எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். அமைச்சர் பொன்முடி வழக்கையும் கையில் எடுத்துள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 10) மாலையே வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது, எந்த காரணத்துக்காக, இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளார் என்பது விசாரணையின் போது, நீதிபதி கூறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

MUST READ