உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதியை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் நடந்த விபரீதம்!
அதன்படி, வரும் ஜனவரி 17- ஆம் தேதி அன்று மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும்; ஜனவரி 15- ஆம் தேதி மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டும், ஜனவரி 16- ஆம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டும் நடைபெறவுள்ளது.
ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடக்கும் அந்தந்த இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும். மாடுபிடி வீரர்கள், காளைகள் பதிவு குறித்து சம்மந்தப்பட்டத் துறையின் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஜனவரி 09- ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் தொடரும்”- போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!
இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அவிழ்க்கும் போது சாதி பெயரை குறிப்பிடக் கூடாது; காளையின் உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயர் குறிப்பிட்டு காளைகளை அவிழ்க்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.